Lyric Special…..

September 25, 2012

பேசுகிறேன் பேசுகிறேன்

Filed under: Uncategorized — Ss @ 6:48 pm

பேசுகிறேன் பேசுகிறேன்
உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே
நான் பூக்கள் நீட்டுகிறேன்

எதை நீ தொலைத்தாலும்
மனதை தொலைக்காதே
அடங்காமலே அலை பாய்வதே
மனம் அல்லவா

கடல் தாண்டும் பறவைக்கெல்லாம்
இளைப்பார மரங்கள் இல்லை
கலங்காமாலே கண்டம் தாண்டுமே
முற்றுபுள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தால்
முடிவென்பதும் ஆரம்பமே
வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்ததே வா
அடங்காமலே அலை பாய்வதே
மனம் அல்லவா

காட்டில் உள்ள செடிக்களுகெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சில் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்சம் நேரம் தானே
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தான் ஒரு இரவேது
வடியாமல் தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா
அடங்காமலே அலை பாய்வதே
மனம் அல்லவா

Blog at WordPress.com.