Lyric Special…..

March 3, 2010

ஏதோ நடக்குது . . .

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 7:21 pm
Tags: , ,

ஏதோ நடக்குது எனக்குள்தான்
யார்தான் கொடுத்தது இதை இன்பச்சுமைதனை

மனதினில் புது புது மாற்றம்
ஏனோ இதயத்தின் எடை தனில் ஏற்றம்தான்
கண்ணுக்குள் மின்சாரக் கனவு
தூக்கங்கள் துண்டாகும் இரவு
நீர் மேகம் தூறும்போதும்
அங்கத்தில் எங்கெங்கும் சுடுது

தூரம் நின்றும் உன்னைக்கண்டு
நூறு கிலோ வெட்கம்கொண்டு
திக்கி திக்கி வார்த்தை தொட்டு நின்றேன்
கஷ்டப்பட்டு பாடம் செய்தும்
கண்ணாடி முன் பேசி பார்த்தும்
உந்தன் முன்பு வந்த பின்பு ஊமை ஆகிறேன்
நாணம் பெண்களுக்குள்ளே மயக்கமென்ன
மௌனம் போதும் போதும்
அடி காதல் பிறக்கையிலே ஆணின் மனதிலும்
நாணம் போட்டி போடும்
காதல் ஒரு மாயவலை
சிக்கி கொள்ளும் நேரம் வரை
கண்களுக்கு துஞ்சல் இல்லையே
காதல் ஒரு காந்தப்புயல்
யாரும் அதை தள்ளி விட்டு
தப்பி போக வாய்ப்புமில்லையே

உன்னை எண்ணி உன்னை எண்ணி
உள்ளங்கையில் தேத்துக்கொண்டு
ரேகை எல்லாம் காணவில்லை எண்ணில்
உந்தன் பெயர் சொல்லி சொல்லி
ரெண்டு இதழ் மையதிலும்
சின்ன சின்ன காயம் வர கண்டேன் என்னில்
உன்னை பார்த்த பின்னே
உலக யுத்தம் எந்தன் நெஞ்சில் கொண்டேன்
கண் மூடி திறந்திடும் நேரம்
அதற்க்குள் என் ஜீவன் தேயா கண்டேன்
உன்னை கையில் தூக்கிக்கொண்டு
உச்சு கொட்டி பேசிக்கொண்டு
இஷ்டம் தீர இம்சை பண்ணவா
உந்தன் கண்ணில் ஒட்டிக்கொண்டு
உப்பு மூட்டை கட்டிக்கொண்டு
ஊரை எல்லாம் சுற்றி வரவா

கனவெல்லாம் நீதானே. . .

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 7:01 pm
Tags: ,

கனவெல்லாம் நீதானே விழியே உனக்கே உயிரானேன்
நினைவெல்லாம் நீதானே கலையாத யுகம் சுகம்தானே
பார்வை உன்னை அலைகிறதே
உள்ளம் உன்னை அணைக்கிறதே
அந்த நேரம் வரும்பொழுது என்னை வதைக்கின்றதே

சாரல் மழைத்துளியில் உன் ரகசியத்தை வெளிப்பார்த்தேன்
நாணம் நான் அறிந்தேன் கொஞ்சம் பனிப்பூவாய் நீ குறுக
எனை அறியாமல் மனம் பறித்தாய் உனை மறவேனடி
நிஜம் புரியாத நிலை அடைந்தேன் எது வரை சொல்லடி
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள் தினம் தினம்

தேடல் வரும் பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி
காணலாய் கிடந்தேன் நான் உன் வரவால் விழித்திருந்தேண்
இணைப்பிரியாத நிலைப்பெறவே நெஞ்சில் யாகமே
தவித்திடும் போது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன்
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகம் தினம் தினம்

இதுவரை இல்லாத உணர்விது. . .

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 6:58 pm
Tags: , ,

இதுவரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை தேடிடும்
பாடல் கேட்டாயோ

மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே

இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு கொல்லாமல் கொ
ல்
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்

அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண்மேகமும் வெண்ணிலவும் போல
எந்தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்சமோ உன் போல அல்
ஏதோ ஓர் மாற்றம்
நிலை புரியாத தோற்றம்
இது நிரந்தரம் அல்ல
மாறிவிடும் மன நிலை தான்

மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே முத்தான உணர்வுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள்
நமக்கு முன்னாலே

தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே

அன்பில் அவன். . .

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 6:52 pm
Tags: ,

அன்பில் அவன் சேர்த்த இதை
மனிதரே வெறுக்காதீர்கள்
வேண்டும் என இணைந்த இதை
வீணாக மிதிக்காதீர்கள்

உயிரே உன்னை உன்னை எந்தன்
வாழ்க்கை துணையாக
ஏற்கின்றேன்
ஏற்கின்றேன்
இனிமேல் புயல் வெயில் மழை
பாலை சோலை இவை
ஒன்றாக கடப்போமே

உன்னை தாண்டி எதையும்
என்னால் யோசனை செய்ய
முடியாதே முடியாதே

நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ மாறாதோ
ஒரு ஜோடி போட்டுத்தான்
நீங்கள் போனாலே
கண் பட்டுக் காய்ச்சல்தான்
வாராதோ வாராதோ

நீளும் இரவில் ஒரு பகலும்
நீண்ட பகலில் சிறு இரவும்
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம்
என்று எங்கு அதை பயின்றோம்

பூம் வானம் காற்று
தீயை நீராய் மாற்று
புதிதாய் கொண்டு வந்து நீட்டு

காதல் எல்லாம் நுழையும் இடம்
கல்யாணம் தானே
இன்று தொடங்கும் இந்த காதல்
முடிவில்லா வானே

Blog at WordPress.com.