Lyric Special…..

November 13, 2009

எனதுயிரே…

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 10:50 am
Tags: ,

எனதுயிரே, எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்.
எனதுறவே, எனதுறவே
கடவுளை போல் நீ முளைத்தாய்.
நெடுஞ்சாலையில் படும் பாதம்போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே தரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே…

இனி இரவே இல்லை கண்டேன் உன்
விழிகளில் கிழக்கு திசை.
இனி பிரிவே இல்லை அன்பே உன்
உளரலும் எனக்கு இசை.
உன்னை காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்.
கண்ணால் நீயும் அதிலே எழுதிப்போனாய்
நல்ல ஓவியம்.
சிறு பார்வையில், ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்.

மரமிருந்தால் அங்கே என்னை நான்
நிழலென நிறுத்திடுவேன்.
இலை விழுந்தால் ஐயோ என்றே நான்
இருதயம் துடித்திடுவேன்.
இனிமேல் நமது இதழ்கள்
இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே…
நெடுநாள் நிலவும் நிலவின்
கலங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே…
உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே, நீ என் வாழ்வின் மோட்ச்சமே…

உயிரே உயிரே பிரியாதே

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 10:47 am
Tags: ,

உயிரே உயிரே பிரியாதே
உயிரை தூக்கி எறியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே

கனவே கனவே கலையாதே
கண்ணீர் துளியில் கரையாதே
நீயில்லாமல் இரவே விடியாதே

பெண்ணே நீ வரும் முன்னே
ஒரு பொம்மை போலே இருந்தேன்
உன் புன்னகையாலே முகவரி தந்தாயே…

ஆயுள் முழுதும் அன்பே
உன் அருகினில் வாழ்ந்திட நினைத்தேன்
அரை நொடி மின்னல் போலே சென்றாயே…

புல் மேல் வாழும், பனிதான் காய்ந்தாலும்
தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம் ஆனால் பொற்காலம்.
உன் அருகாமை, அதை நான் இழந்தாலும்
சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்
நினைவே சந்தோஷம்.

கடல் மூழ்கிய தீவுகளை
கண் பார்வைகள் அறிவதில்லை
அது போலே உன்னில் மூழ்கிவிட்டேன்…

உன் கைக்கோர்த்து அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே வந்தாய் என்றே கேட்கிறதே.
உன் தோள் சாய்ந்து நான் நின்ற மரம்
நிழலை எல்லாம் சுருட்டிக்கொண்டு
நெருப்பாய் எரிக்கிறதே.
நிழல் நம்பிடும் என் தனிமை;
உடல் நம்பிடும் உன் பிரிவை;
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே…

எனக்கு பிடித்த பாடல்…

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 10:40 am
Tags: ,

எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை
எந்தன் மனது அறியுமே
என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயை கூட்டுமே
உதிர்வது பூக்களா
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா.

மெல்ல நெருங்கிடும் போது நீ தூரம் போகிறாய்
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்

காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையை போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்…

வெள்ளி கம்பிகளை போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணில் வந்து சேர அது பாலம் போடுதோ
நீர் துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்

ஆயிரம் அருவியாய் அன்பிலே நனைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்…

மின்னல் ஒரு கோடி

Filed under: Song Lyrics,Tamil — Ss @ 10:11 am
Tags: ,

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம்  பூக்கள் ஒன்றாக பூத்ததே
உன் வார்த்தை தேன் வார்த்ததே
மௌனம் பேசியதே
குளிர் தென்றல் வீசியதே
ஏழை தேடிய ராணி நீ என் காதல் தேவதையே…

குளிரும் பனியும் எனை சுடுதே சுடுதே
உடலும் உயிரும் இனி தனியே தனியே
காமன் நிலவே எனை ஆளும் அழகே
உறவே உறவே இன்று சரியோ பிரிவே
நீராகினானால் நான் மழையாகினேன்
நீ வாடினால் என் உயிர் தேடினேன்….

நானும் வர உந்தன் வாழ்வில் உறவாட வருகிறேன்…
காதல் வரலாறு எழுத என் தேகம் தருகிறேன்…
என் வார்த்தை உன் வார்த்யேதை…

மழையில் நனையும் பனி மலரை போலே
என் மனதை நனைத்தேன் உன் நினைவில் நானே
உலகை தழுவும் நள்ளிரவை போலே
என் உள்ளே பரவும் ஆருயிரும் நீயே
எனை மீட்டியே நீ இசையாக்கினாய்
உனை ஊற்றியே என் உயிர் ஏற்றினாய்…

Create a free website or blog at WordPress.com.